பகுதி – 2
ஆயிஷா இரா. நடராசன்
தமிழக அரசின் நூலகப் பாடவேளைத் திட்டத்தை இரு கரம் கூப்பி வணங்கி வரவேற்கிறோம். இதன்மூலம் தமிழகக் கல்வியின் இன்னொரு பொற்காலம் தொடங்கி இருக்கிறது. நம் குழந்தைகளின் அன்றாட வாழ்வில் புத்தக வாசிப்பு எனும் பொக்கிஷத்தை விதைக்க அனைத்துப் பள்ளிகளிலும் வாரம் ஒரு பாடவேளை நூலக – பாட வேளையாக அறிவித்து வாசிப்பைக் கட்டாயமாக்கி இருக்கிறார்கள். என்ன ஒரு அற்புதம் இந்த அரசாணையே (அரசாணை எண் 19562/பொ. நூ.2/2021-3 Dt-03:11.2021) நமது நீண்ட நாள் இலட்சிய இலக்குகளின் எதிர்பார்ப்புகளின் கோரிக்கைகளின் ஒப்பற்ற திட்ட அறிக்கை போல உள்ளது. இளம் வாசகர் வட்டம், வாரம்தோறும் நூல் அறிமுகம் நடக்கும் வகுப்பறை, வட்டார வாசிப்பு பரிசுகள், மாவட்ட மாநில விருதுகள், மாணவர்களுக்கான வாசிப்பு முகாம்கள்… ஊக்குவிக்கும் இந்த ஓசையில்லா கல்வி நாளிதழ் வாசிப்பு முதல், காவிய வாசிப்பு வரை ஊக்குவிக்கும் இந்த ஓசையில்லா கல்வி – புரட்சிக்கு நாம் ஏதாவது ஒரு விதத்தில் உதவிட வேண்டுமே என்று தோன்றியது.
பள்ளி நூலகத்தில் நம் குழந்தைகள் கையில் படும்படி இருக்கவேண்டிய மிகச் சிறந்த தமிழ்ப் புத்தகங்களை ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தினேன். பள்ளிதோறும் வாசிப்பை வளமாக்கி அதை ஒரு இயக்கமாக மாற்றிட நமது மொழியில் வெளிவந்துள்ள இந்த நூல்கள் பெரிதும் உதவும். பள்ளிகளின் இளம் வாசகர் வட்டத்தை மேம்படுத்த அவசியம் தேவைப்படும் புத்தகங்கள் என என் தேர்வுப்பட்டியல் இது. குழந்தைகளுக்கான மாணவர்களுக்கான வாசிப்பு முகாம்களுக்கு இந்த நூல்களை மாணவர்கள் தேர்வு செய்யலாம். ஒவ்வொரு பள்ளி நூலகத்திலும் மாணவர்களும், ஆசிரியர்களும் வாசிக்க இந்தப் புத்தகங்கள் இருந்தாலே போதும். இப்பட்டியலில் அனைத்துவகை நூல்களும் உள்ளன. இது எனது தேர்வு எனினும் நூல்களின் முக்கியத்துவம் கருதி என் நூல்களையும் இணைத்துள்ளேன். வகுப்பு-வயது அடிப்படையில் ஆசிரியர்களே இவற்றைப் பிரித்துத் தரலாம்.
குழந்தைகளுக்கு தலைமைப் பண்பு பயிற்சி, சிறப்பு திறன் மேம்பாடு விஞ்ஞானி ஆவது, ஐ.ஏ.எஸ். பயிற்சி என நாம் இறங்குவதைவிட அவர்களை தரமான புத்தக வாசிப்பாளர் ஆக்கினாலே போதும். அதற்கு பள்ளி நூலகத்தை பலப்படுத்த வேண்டும். பள்ளியின் முன்னாள் மாணவர்கள், ஆர்வலர்கள் சேர்ந்தும் கூட இந்த நூல்களை மொத்தமாக வாங்கி பள்ளி நூலகத்திற்குப் பரிசளிக்கலாமே. அரசின் நூலக பாட வேலைத் திட்டத்தை ஒவ்வொரு பள்ளியும் திறம்பட செயலாற்றுவதற்கு கல்வித்துறையோடு இணைந்து நாமும் ஒத்துழைப்போம். நன்றி.
கல்விச் சிந்தனைகள் – அம்பேத்கர்
தொ: ரவிக்குமார் (டாக்டர் அம்பேத்கரின் கல்வி குறித்த சிந்தனைத் தொகுப்பு)
இந்திய வரலாற்றில் பகவத்கீதை – பிரேம்நாத் பசாஸ் (விடியல்) (பகவத்கீதை பற்றிய சமூக பார்வை)
யானை சவாரி – பாவண்ணன்
(மனம் கவரும் சிறார் பாடல்களின் தொகுப்பு)
ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான கல்விமுறை
பாவ்லோ பிரையரே (கற்றலை மக்கள் கோணத்தில் விவரிக்கும் தத்துவநூல்)
சிறகு முளைத்த யானை – கிருங்கை சேதுபதி(குழந்தைப் பாடல் தொகுப்பு விருதுபெற்ற நூல்)
நம்பர் பூதம் – எக்ஸென்ஸ் பெர்க்கர்
(எண்களுக்கு என்று ஒரு பூதம் – ஜெர்மன் மொழியின் கணித சாகச நூல்)
இது யாருடைய வகுப்பறை-ஆயிஷா இரா.நடராசன்(ஆசிரியர் செயல்பாடுகள் – மாணவர் உளவியல் பற்றிய வழிகாட்டி நூல்)
வானவில் மனது – சதீஷ் கே.சதீஷ்
(யூமா வாசுகி) (வாசிப்பை மேம்படுத்தும் கதையாடல் கொண்ட நூல்
கல்விச் சிந்தனைகள் காந்தியடிகள் –
(தொ.அ.அண்ணாமலை)(மகாத்மாவின் கல்வி என்பது மனித சமூக கல்வியின் முக்கிய அணுகுமுறை)
குழந்தைகளும் குட்டிகளும் – ஓ.பெரோவ்ஸ்கயா
(ஒவ்வொரு விலங்குக்குட்டி பற்றியும் படிக்க என்ன ஒரு சுவை)
காட்டிலே கதைகள் – சிப்பி பள்ளிப்புறம்
த: எல்.பி.சாமி) (கதைகளில் இவை தனிரகம் – காடுகளின் குரல்பதிவு)
பேசியது கைப்பேசி – தேவி நாச்சியப்பன் (பழனியப்பா) (அழகான சிறார் பாடல்களின் தொகுப்பு விருதுபெற்ற நூல்)
எண்களின் கதை – த.வி.வெங்கடேஸ்வரன்
(கணிதம் இனிக்கும் என்று குழந்தைகளை ஈர்க்கும் புத்தகம்)
கல்விச் சிந்தனைகள் – லெனின்
(தலைவர் லெனினின் கல்விச் சிந்தனைகள் – பொதுக்கல்வி பற்றி பல கேள்விகளை எழுப்புகின்றன)
எண்ணும் மனிதன் – மல்பா தஹான் (சுகல்)
(அசத்தலான கணிதநூல்… குழந்தைகளால் கீழே வைக்கவே முடியாது)
கிழவனும் கடலும் (சுருக்கம்) – ச. மாடசாமி
(உலகப் பிரசித்திபெற்ற மனிதநம்பிக்கைக் கதை)
ஹென்றி போர்முனைக்குச் சென்ற சிறுவன் – ஸ்டீபன் கிரேன் (போர்முனை குறித்த குழந்தைப் பார்வை. உலக அளவில் பேசப்பட்ட படைப்பு)
கல்விச் சிந்தனைகள் – பாரதியார் (தொ: ந.ரவீந்திரன்)
(மகாகவியின் கல்வி குறித்த பார்வை சிலிர்க்க வைக்கும் ஒன்று)
மாபெரும் சபைதனில்… – உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்.
(தாமஸ் முன்ரோ பிளாக்பரன் வரை நிர்வாக வரலாறும் – அர்ப்பணிப்பின் பதிவும் நம்மை சிலிர்க்க வைக்கும்)
தேவதைக் கதைகள் – கே.முரளிதரன்
(உலக தேவதைக் கதைகளின் சிறப்பான சிறு பதிவு இந்த நூல்)
171 பறவை டாக்டர் – லின் சாய்யிங் – (ஆதி.வள்ளியப்பன்) (இத்தனை சுவையாக ஒரு வனவியல் நூல் எழுத முடியுமா என வியக்க வைத்த நூல்)
ஏழுதலை நகரம் – எஸ். ராமகிருஷ்ணன்
(சிறார் இலக்கியத்திற்கு தரமான – ஆழமான பதிவாக விரிவடையும் நூல்)
பறவைகளின் வீடுகள் – சாலைச் செல்வம் (குட்டி ஆகாயம்) (குழந்தைகளுக்கு பறவை உலகை அறிமுகம் செய்யும் புத்தகம்)
விளையாட்டு விஞ்ஞானம் – அ.சுப்பையா பாண்டியன் (குழந்தைகளுக்கு அன்றாட விளையாட்டின் மூலம் அறிவியலை சொல்லித்தரும் நூல்)
கல்விச் சிந்தனைகள் – தந்தை பெரியார் – (தொ: அ.மார்க்ஸ்) (தந்தை பெரியாரின் சீர்திருத்தக் கல்வி பற்றிய முக்கிய நூல்)
டெலஸ்கோப் மாமா சாகசங்கள் – ஆயிஷா இரா.நடராசன் (சலீம் அலிகளை உருவாக்கும் படைப்பு- விதை இந்த நூல்)
கல்விச் சிந்தனைகள் – தாகூர் (தொ: ஞாலன் சுப்பிரமணியன்) (தாகூரின் கல்விச் சிந்தனைகள் முழுமை மனிதனை உருவாக்கும் ஆற்றல் கொண்டவை)
காந்தித் தாத்தா கதைகள் – கொத்தமங்கலம் சுப்பு
(மகாத்மா காந்தியை கதை வழியே குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் புத்தகம்
விலங்குக் காட்சிச் சாலையில் – ரஷ்கின் பாண்டு (NBT) (ரஸ்கின் பாண்டின் கதைகளில் குழந்தைகள் மிகவும் விரும்பி வாசித்த நூல் இது)
பெனி எனும் சிறுவன் – கிகோ புளூஷி (யூமா.வாசுகி) (இக்கதை சிறார் இலக்கிய உலகில் ஒரு ஆழமான பதிவு)
கறுப்பழகன் – அன்னா சிவெல் (யூமா. வாசுகி) (குதிரையை பிரதான பாத்திரமாக முன்வைத்த வரலாறு போற்றிய படைப்பு)
கும்பிடிப்பூச்சியின் பயங்கர பசி – ஆதி வள்ளியப்பன் (சுற்றுச்சூழல் கதையாடலின் அபூர்வப் பதிவு இந்த நூல்)
சிந்துச் சமவெளி நாகரிகம் – சு.சீனிவாசன்
(அறிவியல் வெளியீடு) (சிந்துச்சமவெளியின் பண்டைய வாழ்வை அறிவியல்பூர்வமாக அணுகும் நூல்)
டோரா வரை – ஆயிஷா. இரா.நடராசன்
(கார்ட்டூன் கதாநாயகர்களின் வித்தியாசமான புனைவு)
தொல்லியல் அதிசயங்கள் – சரவணன் பார்த்தசாரதி (ஒரு தொல்லியலை எப்படி அணுக வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுத்தரும் நூல்)
அடங்காத மான் ஆத்மா கே. இரவி
(குழந்தைகளின் கற்பனா சக்தியைத் தூண்டும் சிறப்பான படைப்பு)
கதவு – கி.ராஜநாராயணன்
(குழந்தைகளின் விளையாட்டை மய்யமாக வைத்த சிறப்பான கதை)
காவேரியின் அன்பு – பூவண்ணன்
(பூவண்ணன் படைப்புகளில் திரைப்படமாக எடுக்கப்பட்ட வெற்றிப் படைப்பு)
மந்திர மரம் – ச.முருக பூபதி (சிறார் நாடக செயற்பாட்டாளரின் சிறப்பான படைப்பு
பென்சில்களின் அட்டகாசம் – விழியன்(சிறார் இலக்கியப் படைப்பு உலகின் குறிப்பிடத்தக்க நூல் இது)
விழிப்புணர்வுப் பாடல்கள் – அறிவியல் வெளியீடு(ஒவ்வொரு குழந்தையும் பாடிப்பார்க்க வேண்டிய சிறந்த பாடல்கள்)
பூச்சிகளின் விந்தை உலகம் – ஹிந்தர் தனோவா
(த: டாக்டர் ஜனார்த்தனன்) (NBT)
(எப்போதாவது வெளிவரும் பூச்சிகள் உலகின் சிறப்பான பதிவு)
நாகா – ஆயிஷா இரா.நடராசன்
(சாரண இயக்கம் பற்றிய படைப்பான இந்நூல் பல விருதுகள் பெற்றது)
தாய்நாட்டுக்காகப் போராடிய தியாகச்சுடர்கள்
நாகை விஜயபாரதி (Aruna)
(இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களின் சரித்திரம்)
மா கடிகாரம் – விழியன் (விருதுகள் பெற்ற சிறார் இலக்கியப் படைப்பு உயிரி கடிகாரம் குழந்தைகளை வாசிக்க ஈர்க்கும்)
பழமொழிகளும் விளக்கங்களும் (Aruna) – தமிழ்ப் பிரியன் (தமிழ்ப் பழமொழிகளை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறது)
குட்டி இளவரசன் – அந்துவான் எக்சுபரி
(த: யூமா.வாசுகி)
(உலக சிறார் இலக்கிய மகுடம் இந்த நூல்)
தமிழ் மருந்துகள் – கி.ஆ.பெ.விசுவநாதம்(Aruna)
(தமிழ் – சித்தமருத்துவம் பற்றி சிறார்களுக்கு அறிமுகம் செய்யும் நூல்)
மகாகவி பாரதியார் வாழ்க்கை வரலாறு – நாஞ்சில் ரமேஷ் (Aruna) (பாரதியின் வாழ்க்கை வரலாற்றை – சுவைபட விவரிக்கிறது)
அறிவின் சிகரம் – அம்பேத்கர் – பார்வதி குமரன் (Aruna) (அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கைப் போராட்டம். குழந்தைகள் அவசியம் படிக்க வேண்டிய நூல்)
மாத்தன் மண்புழு வழக்கு – பேரா எஸ். சிவதாஸ் (தமிழில் யூமா. வாசுகி)
(சுற்றுச்சூழல் பிரச்சனையை இத்தனை வசீகரமாக எழுத முடியுமா என வியக்க வைத்த நூல்)
கருப்புத்தங்கம் காமராஜர் – பார்வதி குமரன் (Aruna) (பெருந்தலைவர் காமராசரின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவு)
எனக்கு ஆப்பிரிக்கா பிடிக்கும் – மருதன்
(சிறார்களுக்கு எப்படி வரலாறை அணுக வேண்டும் என்பதைப் புரிய வைக்கும் நுட்பமான படைப்பு)
பள்ளி மாணவர்களுக்கான பொதுக் கட்டுரைகள்
கீர்த்தி (Aruna) (கட்டுரைகள் எழுதுவதன் அடிப்படைகளை புரியவைக்கும் புத்தகம்)
பஷீராவின் புறாக்கள் – கொ.மா.கோ.இளங்கோ
(காஷ்மீரத்துச் சிறார்களின் மனப்பதிவை முன்வைக்கும் படைப்பு)
சாதனையாளர்களின் சரித்திரம் – நாகை விஜயபாரதி (Aruna)
(உலகில் சாதனையாளர்கள் பிறப்பதுஇல்லை… அவர்கள் உழைப்பால் உருவாகிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் நூல்)
ஒற்றைச் சிறகு ஓவியா – விஷ்ணுபுரம் சரவணன்
(சூழலியல் போராட்டத்தை சிறார் இலக்கியமாக மாற்ற முடியுமா!! பல விருதுகளைப் பெற்ற படைப்பு)
அறிவுக்கு விருந்தாகும் அறிஞர்களின் வாழ்க்கைஆர்.கே.எஸ். (Aruna)
(பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கைச் சரித்திரம்)
சரித்திரம் படைத்த இந்தியர்கள்
-விஜயராகவன் (Aruna) (இந்திய வரலாற்று நாயகர்களின் வித்தியாசமான அணிவகுப்பு)
அலாவுதீன் சாகசங்கள் – உதயசங்கர் (மிகச் சிறப்பான சிறார் இலக்கிய படைப்பு இது)
விதவிதமான விடுகதைகள் -விஜயவர்மன் (Aruna)
(விடுகதைகள் ஏன் குழந்தைகளைக் கவர்கின்றன என்று என்னை வியக்க வைத்த புத்தகம்)
கிறு கிறு வானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
(மிகச் சிறந்த தமிழ் சிறார் படைப்பிலக்கியப் புதையல் இது)
பஞ்சதந்திரக் கதைகள் – விஜயராகவன் (Aruna)
(பஞ்சதந்திரக் கதைகள் குழந்தைகளின் படைப்பாக்கத்தை மேன்மைப்படுத்தும்)
டாம் மாமாவின் குடிசை-ஹாரியட் பிரீச்சர் ஸ்டோவ்
(தமிழில்: அம்பிகா நடராஜன்)(அமெரிக்காவை உலுக்கிய படைப்பு – குழந்தைகளுக்கு)
வகுப்பறை முதல் தேர்வறை வரை – கோ.பி.சரபோஜி (Aruna) (மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ள வழிகாட்டும் நூல்)
மத்தியகால இந்திய வரலாறு – சதீஷ் சந்திரா
(வேட்டை எஸ்.கண்ணன்) (இருண்டகாலமாக அறியப்பட்ட காலகட்டத்தின் ஒளிபொருந்திய பதிவுகள்)
மருது பாண்டியர்கள் – சிவபாரதி (Aruna)
(விடுதலைப்போரில் தமிழக சரித்திர வீரதீரர்களின் உணர்ச்சிக்கதை)
தமிழக காலனியமும் வேளாண் குடிகளும் – ஏ.கே.காளிமுத்து (பிரிட்டிஷ் ஆட்சியில் விவசாயிகளின் வரலாறு பேசும் நூல் இது)
அக்பர் பீர்பால் கதைகள் – விஜயராகவன் (Aruna)(சுவாரசியமான சாகச கதைகளாக தேர்வு செய்து தொகுத்திருக்கிறார்கள்)
தமிழ் புலவர் வரலாறு – தமிழ்ப்பிரியன் (Aruna)
(தமிழ் இலக்கியத்தில் ஆளுமைகளாகத் திகழ்ந்த புலவர்கள் பற்றிய வரலாறு)
விடுதலைத் தழும்புகள் – சு.பொ.அகத்தியலிங்கம்
(விடுதலைப் போரின் தழும்புகளை இன்றைய தலைமுறை அறிய பதிவிட்ட வரலாற்று நூல்)
தெனாலிராமன் கதைகள் – சிவரஞ்சன் (Aruna)
(சிந்தனையைத் தூண்டும் தெனாலிராமன் கதைகளது தொகுப்பு)
மகாகவி பாரதியார் – வ.ரா. (பாரதியின் நண்பர் அவரைப் பற்றி பதிவு செய்யும் மிகச் சிறந்த ஆவணம் இந்த நூல்)
மகாகவி பாரதியின் புதிய ஆத்திச்சூடி – தமிழ் பிரியன் (Aruna) (குழந்தைகள் அவசியம் வாசிக்க வேண்டிய மகாகவியின் பங்களிப்பு)
புத்தர் ஒரு பகுத்தறிவு சாதி – டி.இலட்சுமணன்
(புத்தரின் வாழ்வை அறிவியல்பூர்வமாக விமர்சிக்கும் நூல் இது)
தமிழக வரலாற்றில் ஊரும் சேரியும் – பக்தவச்சல பாரதி (சமத்துவம் பேசுகிற மானுடவியல் – அணுகுமுறை கொண்ட அரிய நூல்)
படித்து வளருவோம் நாடோடிக் கதைகள்
(உதயசங்கர் மொழிபெயர்ப்பு) (சிறார்களுக்கு நாடோடிக் கதைகள்… அற்புத விருந்து)
உலகப்புகழ்பெற்ற சித்திர கதைகள் –
(கொ.மா.கோ.இளங்கோ) (இந்த வரிசையில் ஒவ்வொன்றும் வாசிப்பை மேன்மைப்படுத்தும் அம்சம் நிறைந்தது)
பாரதியார் சரித்திரம் – செல்லம்மாள் பாரதி
(மகாகவியின் காவியத்தை அவரது வாழ்க்கைத் துணை மூலம் அறிய வாய்ப்பு)
லூசி – உலகை உலுக்கிய பரிணாமத் தத்துவம்
-சி.ராமலிங்கம் (லூசி எனும்-பாறைப் படிவு மனித புதையலை அலசிஆராயும் அறிவியல் நூல்)
ஏலகிரியில் சிறுத்தை வேட்டை– கெனத் ஆண்டர்சன்
(சிறுத்தை வேட்டையாளரின் மிகப்பிரபலமான சாகசப் படைப்பு)
மலர் அல்ஜீப்ரா – ஆயிஷா இரா.நடராசன்
(தமிழின் கணிதப் புதையலை உலகறிய வைக்கும் – சிறார் கதையாடலை மையமாக கொண்ட சிறார் நாவல்)
குறுக்கெழுத்து அறுபது – மோ.கணேசன்
(குழந்தைகளை ஈர்க்கும் குறுக்கெழுத்துப் புதையல்)
நாராய் நாராய் – (பறவைகள், மனிதர்கள் சரணாலயங்கள்) – ஆதி வள்ளியப்பன்
(குழந்தைகளுக்கு வன விலங்குச் சரணாலயங்களை அறிமுகம் செய்யும் நூல்)
நூலகங்களுக்குள் ஒரு பயணம் – கமலாலயன்
(நூலகங்கள் மீது காதலை ஏற்படுத்தும் படைப்பு)
குழந்தைகளைக் கொண்டாடுவோம் – என்.மாதவன்
(குழந்தைகளை எப்படி எல்லாம் ஊக்குவிக்கலாம் என விவரிக்கும் நூல்)
பகத்சிங் – அ.அன்வர் உசேன்
(மாவீரன் பகத்சிங்கை மாணவர்களுக்கு அற்புதமாய் அறிமுகம் செய்யும் புத்தகம்)
புதியன விரும்பு (என்ன படிக்கலாம்) – பொன்.தனசேகரன் (பள்ளி முடித்தபிறகு என்ன வெல்லாம் படிக்கலாம் என வழிகாட்டும் புத்தகம்)
கல்பனா சாவ்லா (Aruna) – சிவ நாகேந்திர பிரபு
(இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பற்றிய சிறப்பான பதிவு)
பேரறிஞர் அண்ணா (Aruna) – லட்சுமி வேலு
(பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கைக்கதை… திராவிட தமிழக எழுச்சி வரலாறோடு கலந்து தரும் முயற்சி)
காவல் கோட்டம் – சு.வெங்கடேசன்
(ஒரு வரலாற்று நாவல் எப்படி இருக்க வேண்டும் என்று அறிய உதவும் விருது பெற்ற புதினம். உயர்நிலை மாணவர்களுக்கானது)
இடிதெய்வத்தின் பரிசு (சீன சிறார் கதைகள்) ஜெயந்தி சங்கர் (சீன சிறார் கதைகளின் தனிச்சிறப்பு படைப்பாக்கத் தூண்டுதல்…. அதை உணர வைத்த நூல்)
கொண்டைக் குருவி – பாவண்ணன்
(சிறார் பாடல் இலக்கியத்தின் மகுடமாய் மிளிரும் சிறப்பான தொகுப்பு)
தர்பூசணி பழச்சிறுமி – தமிழில் அ.சுகுமாரன்
(மலையாள சிறார் இலக்கியப் படைப்பு…. சிறப்பான மொழிபெயர்ப்பில்)
தந்தை பெரியார் (Aruna) – சண்முகவடிவேல்
(தந்தை பெரியாரின் சுருக்கமான வாழ்க்கை வரலாறு… குழந்தைகளுக்குப் புரியும்படி…)
வள்ளலாரின் அமுத மொழிகள் – சிவரஞ்சன்
(அருட்பிரகாச வள்ளலாரின் பல்வேறு நூல்களில் இருந்து தொகுக்கப்பட்ட அவரது சிந்தனைகள்)
விஞ்ஞான விக்கிரமாதித்யன் கதைகள் – ஆயிஷா. இரா.நடராசன் (மருத்துவ உலகின் வரலாற்றை விக்கிரமாதித்தன் வேதாள கதை ஊடாக சொல்லும் விருது பல வென்ற படைப்பு)
ஹோமியோபதி மருத்துவம் – ஒரு அறிமுகம்
ச.வெங்கடாசலம் (இந்திய மருத்துவத்தின் அரிய பதிவுகள்… சிறாருக்குப் புரியும் நேரடி மொழியில்)
மந்திர மரம் – ஞா.கலையரசி
(இக்கதை குழந்தைகளைக் காந்தமாக இழுக்கும் ஆற்றல்மிக்க படைப்பு)
நீ எறும்புகளை நேசிக்கிறாயா ?
-தொ: ஆயிஷா இரா.நடராசன்
(சத்யஜித்ரே உட்பட பல இந்திய சிறார் படைப்பாளிகளின் கதைத் தொகுதி இது)
அறிவியல் துளிகளின் கதைகள் – லூர்து எஸ்.ராஜ்
(ஒரு சிறிய அறிவியல் செய்தியை விரிவான கதையாக மாற்ற முடியுமா என வியக்க வைக்கும் முயற்சி)
டார்வின் ஸ்கூல் – ஆயிஷா இரா.நடராசன்
(பரிசுகள் பல வென்ற சூழலியல் சிறார் நாவல்)
எடிசன் – சாமிநாத சர்மா
(தாமஸ் ஆல்வா எடிசனின் வாழ்க்கை வரலாறு…)
சிறார் கிராமியக் கதைகள் – உதயசங்கர்
(குழந்தைகள் விரும்பி வாசிக்கும் கிராமியக் கதைகளின் தொகுப்பு)
வால்கா முதல் கங்கை வரை
ராகுல சாங்கிருத்யாயன்
(மனிதகுலத்தின் – மிகச் சுவையான சரித்திர பதிவு… கண்டிப்பாக குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல்)
கேப்டன் லட்சுமி – ராஜேந்திரன்
(வீராங்கனை லட்சுமியின் வெற்றிக்கதையை நம் குழந்தைகள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்)
இந்திய சுதந்திர- (படக்கதை) வரலாறு ச.தமிழ்ச்செல்வன்
(விடுதலைப் போராட்ட வரலாற்றை படக்கதையாக தரும்… அற்புதப் படைப்பு)
விடாமுயற்சி வெற்றிதரும் – ச.சுப்பாராவ்
(உலக சிறார் இலக்கியத் தொகுப்பு… குழந்தைகளைக் கவரும் சிறப்பான படைப்பு)
பச்சை வைரம் கொ.மா.கோ.இளங்கோவன்
(கருப்பின மக்களின் வரலாற்றை சிறார் இலக்கியமாக்கிய பிரமாண்ட முயற்சி)
கணித மேதை ராமானுஜம்– ரகமி, த.வி.வெங்கடேஸ்வரன்
(சீனிவாச ராமானுஜம் எனும் மேதையை சிறார்களுக்கு அறிமுகம் செய்யும் முழுமையான வாழக்கை வரலாறு)
அரிஸ்டாட்டில் வாழ்க்கையும் தத்துவமும் ஆர்.பெரியசாமி
(அலெக்சாண்டிரியாவில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலின் தத்துவ எழுச்சியும் போராட்டங்களும்)
முதன்மைப் பெண்கள் – சரவணன் பார்த்தசாரதி
(பெண் சாதனையாளர்கள் பங்களிப்பாளர்களின் இருண்ட சரித்திரம்)
ஜவஹர்லால் நேரு, வாழ்வும் அரசியலும்
பேரா.அ.உலயலனோவ்ஸ்கி
(ரஷ்ய வரலாற்று அறிஞர் நம் நேரு மாமா பற்றி எழுதிய நூல்)
நிழலைத் திருடிய பூதம் – சி.சரிதா ஜோ
(மிகச் சுவையாக சிறார் இலக்கியப் படைப்பு)
உலகக் கல்வியாளர்கள் – ஆயிஷா. இரா.நடராசன் (உலகக் கல்வியின் ஒப்பற்ற திருப்பு முனைகளைச் சாதித்த மாமனிதர்களின் கதை)
சுங்க இலக்கியக் கதைகள் – ம.சுரேந்திரன்
(சங்க இலக்கியம் சார்ந்த காட்சிகளை படைப்பாக மாணவர் முன் படைக்கும் முயற்சி)
செயல்வழி கணிதம் – அரவிந்த குப்தா
(கல்வியாளர் அரவிந்த குப்தாவின் ஆற்றல்மிக்க கணிதப்படைப்பு)
கொக்கோவும் மிங்கியும் – வான்மதி
(நட்பின் சாராம்சத்தை இப்புனைவு சிறார் முன் சிறப்பாக முன்வைக்கிறது)
தமிழக பள்ளிக் கல்வி – எஸ்.எஸ். ராஜகோபால்
(நமது தமிழகக் கல்வி முறையின் சுருக்கமான வரலாற்றை முன்வைக்கும் ஆவணம்)
ரஃப் நோட்டு – ஆயிஷா இரா. நடராசன்
(மனப்பிறழ்வு நோய் கண்ட மாணவன் கதை சொல்லியாகி அதன்மூலம் மீண்ட கதை)
மாடுகளின் வேலை நிறுத்தம்
டாரின்க்ரோனின் (த: அன்புவாகினி)
(ஆச்சரியப்படும்படியான ஒப்பற்ற சிறார் இலக்கியப் பதிவு இது.
எனக்குரிய இடம் எங்கே? – ச.மாடசாமி
(கல்வி அனைவருக்குமான கல்வியாகச் சென்று சேர்ந்திட போர்க் குரல் எழுப்பும் படைப்பு)
ஆர்.சி.சியில் அற்புத குழந்தைகள்
(யூமா.வாசுகியின் மொழிபெயர்ப்பில் மேலும் ஒரு சிறார் வெற்றிப்படைப்பு.
வகுப்பறைக்கு வெளியே – இரா.தட்சிணாமூர்த்தி
(வகுப்பறையின் சுவர்களைத் தகர்த்து ‘வானமே எல்லை’ என முழங்கும் நூல்)
உயிரினங்களின் அற்புத உலகில் – எம் கீதாஞ்சலி
(ஒவ்வொரு உயிரினமும் புவியின் மொத்த செயலாக்கத்தின் ஒரு பகுதி என புரிய வைக்கும் படைப்பு)
அண்டா மழை (வானம்) – உதயசங்கர்
(சிறார் இலக்கிய படைப்பாக்கத்தில் மேலும் ஒரு எழுச்சிப்பதிவு)
நான் ஏன் என் தந்தையைப் போலில்லை
ஆயிஷா இரா.நடராசன் (மரபியல் குறித்து அறிவியலை சுவையாகப் புரியவைக்கும் முயற்சி)
அமைதியைப் பரப்பும் சடகோவின் கொக்கு
ஆதி வள்ளியப்பன் – குட்டி ஆகாயம்
(இவை காகித கொக்குகள் ஆனால் இவைகளின் வழியே நாம் பெறுகிற செய்தி நெக்குருக வைத்துவிடும்)
பேசப்பட வேண்டிய விஞ்ஞானிகள்– பேரா.மோகனா (பேசப்படாத விஞ்ஞானிகளை இந்த நூல் பேசுகிறது)
வேதியியலின் கதை – மோ.மோகனப்பிரியா
(வேதியியலின் வரலாறு மிகவும் விநோதமானது… இந்த நூல் அதை சுவையோடு பகிர்கிறது)
அறிவியல் முன்னோடி – மேரி கியூரி
(மேரி கியூரி பற்றிய வரலாற்று பதிவு)
அக்கடா – (தேசாந்திரி) – எஸ்.ராமகிருஷ்ணன்
(அழகான ஆழமான மன விரிவு கதை இது… குழந்தைகளுள் தேடலை விதைக்கும்)
அலாவுதீனும் அற்புத விளக்கும் (நர்மதா)
சி.எஸ். தேவ்நாத் (நன்கு தெரிந்த கதைதான் ஆனால் குழந்தைகளுக்கு ஒவ்வொரு முறையும் மந்திரசக்தி விளக்கில் இருந்து வருகிறதே)
சி.வி.ராமன் – 125 – த.வி.வெங்கடேஸ்வரன்
(இந்திய இயற்பியலாளர். சி.வி.ராமனின் வாழ்க்கைக் கதை…)
வானவாசிகள் – முனைவர் பெ.சசிகுமார்
(இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமாரின் பார்ப்பது குறித்த அறிவியல் நூல்)
நேனோ தொழில்நுட்பமும் மயிலிறகின் வர்ண ஜாலமும்
த.வி. வெங்கடேஸ்வரன்
(புதிய அறிவியல் துறையை சுவைபட தமிழுக்கு அறிமுகம் செய்யும் அரிய பொக்கிஷம்)
பாஸ்ராவின் நூலகர் – தமிழில் அன்புவாகினி
(யுத்த குண்டுகள் நடுவேயும் வாசிப்பை நேசித்த மனிதர்களின் கதை)
உள்ளத்தனையது உயர்வு – வெற்றிச் செழியன்
(திருக்குறளை மய்யமிட்டுச் சொல்லப்படும் அழகான நீதிக்கதைகள்)
சர்க்யூட் தமிழன் – ஆயிஷா.இரா. நடராசன்
(தமிழின் முழு அறிவியல் புனைகதைத் தொகுப்பு)
புத்தக தேவதையின் கதை – பேரா எஸ்.சிவதாஸ்
(யூமா.வாசுகி) (வாசிப்பின் எல்லைகளை விரிவடைய வைக்கும் புத்தகத் தேவதைகளின் விருப்பக்கதை)
1650 (வானம்) – விழியன்
(ஜாலியன் வாலாபாக் படுகொலைகளை குழந்தைக்கு வரலாறாகச் சொல்லும் புதினம்)
நட்சத்திர கண்கள் – கொ.மா.கோ.இளங்கோவன்
(மிகச் சிறப்பான சிறார் படைப்பிலக்கிய சாதனைப்படைப்பு)
இயற்பியலின் கதை – (ஈர்ப்பு விசை முதல் ஈர்ப்பு அலை வரை) ஆயிஷா.இர.நடராசன்
(மிகச் சுவையான இயற்பியலின் சரித்திரம் பாடநூலில் உள்ள பல விஷயங்கள் எப்படி வந்தன என்பதை விவரிக்கும்)
காலப் பயணிகள் – விழியன் (பல நூற்றாண்டுகள் நடுவே பயணம் செய்த அனுபவம் தரும் நூல்)
தாத்தா பூ எங்கே போகிறது – லின் சாஸ்ஸிங்
(மிக அற்புதமான சிறார் இலக்கிய சாதனை படைப்பு இது)
கனவினை பின் தொடர்ந்து – தா.வே.பத்மா
(த: ஷாஜஹான்) (கனவுகளைப் பின் தொடர முடியுமா… தொடர்ந்தால் காத்திருக்கிறது அற்புத அனுபவம்)
கிரகணங்களின் நிழல் விளையாட்டு த.வி. வெங்கடேஸ்வரன் (கிரகணங்களின் அறிவியலை பதிவு செய்யும் படைப்பு)
மலாலா – கரும்பலகை யுத்தம் – ஆயிஷா. இரா. நடராசன் (கல்வி தொடர தன் உயிரையும் தரத் தயாராக இருந்த சிறுமி மலாலாவின் கதை)
பாரதிதாசன் கவிதைகள் (முழு தொகுப்பு)
(கண்டிப்பாக குழந்தைகள் வாசிக்க வேண்டிய புரட்சிக் கவிஞரின் கவிதைகள்)
பாரதியார் கவிதைகள் (முழுத் தொகுப்பு)
(தமிழ் இலக்கியப் பிதாமகன் மகாகவியின் கவிதைகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யும் நூல்)
